உள்நாட்டு செய்திகள்

விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களை நோக்கி பயணித்த மக்கள் மீள கொழும்பு திரும்புவதற்காக இன்று(15) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அந்த சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பண்டுக சுவர்ணாஹங்ச இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மேலதிகமாக 200 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தூர பிரதேசங்களுக்கான பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட வகையிலே இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

பேருந்து கவிழ்ந்து விபத்து – மாணவர்கள் உட்பட 28 பேர் வைத்தியசாலையில் [PHOTOS]

wpengine

தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் வௌியானது…

wpengine

வடமத்திய மாகாண பாடசாலைகள் அனைத்தும் நண்பகல் 12 மணியளவில் மூடப்படும்

wpengine