உள்நாட்டு செய்திகள்

காலி வீதியில் போக்குவரத்து மட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்கிஸையில் இருந்து காலி வீதியூடாக சுதந்திர சதுக்கம் வரையில் இன்று(25) பிற்பகல் 1 மணி முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அமரபுர பிரிவின் உன்னத மஹாநாயக்க சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ள காரணத்தினால் இவ்வாறு போக்குவர்த்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

இன்று (25) பிற்பகல் 1 மணிக்கு அவருடைய உடல் கல்கிஸ்ஸ தர்மபால விகாரையில் இருந்து வாகன பேரணி ஊடாக எடுத்துவரப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு சுதந்திர சதுக்கத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே வாகன சாரதிகள் குறித்த தருணத்தில் மாற்று வீதிகளின் ஊடாக பயணிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

செவ்வாய் முதல் பாராளுமன்ற அமர்வு

wpengine

பொது பல சேனா முஸ்லிம்களை ஒருபோதும் தாக்கவில்லை – பிபிஎஸ்

wpengine

இலத்திரனியல் மயமான உள்ளுராட்சிமன்ற வேலைத்திட்டம் இன்று முதல்…

wpengine