Top Story 3ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

புர்கா தடை பிற்போடப்பட்டதா?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புர்காவை தடை செய்வது தொடர்பான பிரேரணை நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (16) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது, இந்த விடயம் தொடர்பில் தெரியவந்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர் இதனை தொிவித்திருந்தார்.

புர்கா மற்றும் பதிவு செய்யப்படாத மத்ரஸா பாடசாலைகளை தடை செய்தல் தொடர்பான பிரேரணையொன்றில் கடந்த 13 ஆம் திகதி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கையெழுத்திட்டிருந்துடன் அதனை திங்கட்கிழமை (15) அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

எனினும், புர்கா தடை தொடர்பில் சர்வதேச அழுத்தங்களும் இலங்கைக்கு நேரடித் தாக்கம் செலுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சஹ்ரானின் மடிக்கணணி தற்போது யாரிடம் உள்ளது?

wpengine

அவர்கள் எமது அரசர்கள்… அவர்களுக்கு தலை வணங்கி மரியாதை செய்யவும்.. கைகுலுக்கக் கூடாது.. மீறினால் கைது… (PHOTOS)

wpengine

வெள்ளவத்தையில் கைதான இரு தாய்லாந்து நாட்டு பெண்களுக்கு எய்ட்ஸ் !

wpengine