உள்நாட்டு செய்திகள்

50 – 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்…



நாட்டிலும், நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதுடன் அடுத்த சில நாட்களுக்கும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது எனவும், ஏனைய பிரதேசங்களில் சிறிய அளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல தடவைகள் சிறியளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

அட்டுளுகம : 4 பொலிசார் காயம் [UPDATE]

wpengine

புதிய சேவை மாற்றங்களுடன் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்.

wpengine

அஜித் மற்றும் ஹரீனுக்கு ஐ.தே.கட்சியில் புதிய பதவிகள்..

wpengine