Top Story 2உள்நாட்டு செய்திகள்

2024 O/L பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை (17) ஆரம்பமாகும் 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 3,663 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சையில் 474,147 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

பரீட்சை ஆரம்பமாவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பரீட்சையில் முறைகேடுகளைக் குறைப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.

Related posts

காலி – அஹங்கம வீதி விபத்தில் இருவர் பலி…

wpengine

இலங்கைக்கு புகழாரம்; சீனாவை நெருங்கும் இலங்கை

wpengine

தொடர் குண்டு தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க பாகிஸ்தான் உதவும்..

wpengine