உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஓய்வின் விளிம்பில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் ஹேரத்



டி20 உலகக்கிண்ண தொடர் முடிந்த உடன் ஓய்வு பற்றிய முடிவை எடுக்க உள்ளதாக இலங்கை அணியின் முன்னணி சுழல் வீரர் ரங்கண ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய இலங்கை அணி அனுபவமற்ற இளம் வீரர்களால் தடுமாறி வருகிறது.

இலங்கை அணியின் இரு தூண்களாக விளங்கிய சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோரின் ஓய்வையே இன்னும் சரிகட்டவில்லை.

இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரரான ரங்கண ஹேரத் (38 வயது) ஓய்வு பெறும் முடிவில் இருக்கிறார்.

அவர் கூறுகையில், “நான் ஒரு சில விடயங்களை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். அதேசமயம் கிரிக்கெட் தெரிவாளர்களிடம் கலந்தோசித்து எனது ஓய்வு குறித்து முடிவு எடுப்பேன்“ என்று கூறியுள்ளார்.

Related posts

ரயில் – கார் விபத்தில் நால்வர் பலி..

wpengine

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ளோருக்கு மேலும் கால அவகாசம்..

wpengine

புதிய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் நாமல்

wpengine