Top Story 1உள்நாட்டு செய்திகள்

180 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

மத்திய மருந்து சேமிப்பு மையத்தில் தற்போது சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டார்.

கடந்த பல மாதங்களாக புற்றுநோய் நோயாளிகளுக்கான மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதன் விளைவாக புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் சில வரையறைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

பலாலி விமான நிலையம் – யாழ். சர்வதேச விமான நிலையமாக மாற்றம்

wpengine

புஸ்ஸலாவில் திடீர் தீ விபத்து

wpengine

ரணில் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் ஐ.ம.சக்தி பிரதிநிதிகள்!

Azeem Kilabdeen