உள்நாட்டு செய்திகள்

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வவுனியா, தோணிக்கல் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று (21) தெரிவித்தனர்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலித்ததாகவும், குறித்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் சிறுமியின் தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Related posts

பிரியந்தவின் சடலம் இன்று இலங்கைக்கு

wpengine

நாளை அதிகாலை முடக்கப்படும் பிரதேசங்கள்

wpengine

மழையுடன் கூடிய காலநிலை சற்று அதிகரிக்க கூடும்…

wpengine