உள்நாட்டு செய்திகள்

07 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது…



(FASTNEWS|COLOMBO) ஒரு தொகை கேரளா கஞ்சாவை வைத்திருந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண வலய மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தன்கேனி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 07 கிலோவும் 200 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சந்தேகநபர் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

நாணயற் சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி…

wpengine

பள்ளியின் முன்னேற்றத்திற்காக இராணுவ தளபதியினால் நிதி அன்பளிப்பு [PHOTOS]

wpengine

அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சை இவ்வாரம்…

wpengine