Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஹேமசிறி – பூஜித் தொடர்ந்தும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் இன்று(23) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 09 ஆம் திகதி மீளவும் அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனியார் பஸ்களிலும் தண்டப்பண முறைமை அமுலுக்கு..

wpengine

நான்கு இணையத்தளங்களுக்கு தடை

wpengine

இலஞ்ச மற்றும் ஊழலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி…

wpengine