உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.சு.க பிரபல அமைச்சர்களை பதவி நீக்க கோரி, ஐ.தே.க உறுப்பினர்கள் 33 பேர் கையொப்பம்…



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான எஸ்.பி. திசாநாயக்க, டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்கொடி மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரை அரசாங்கத்தில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் 33 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு குறித்த இந்தக் கடிதத்தை பிரதமருக்கு கையளித்துள்ளனர்.

அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை விமர்சித்தல், அமைச்சரவை தீர்மானங்களை விமர்சித்தல் போன்ற அரசுக்கு எதிரான செயற்பாடுகளை இவர்கள் மேற்கொள்வதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிரதியொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அனுப்பப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுதந்திர கட்சியின் பிரபல அமைச்சர்களை பதவி நீக்க கோரிக்கை; 33 UNP உறுப்பினர்கள் கையொப்பம்

 

Reeshma

Related posts

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா…

wpengine

ஹிருனிகாவை கைது செய்யாமலிருப்பது நல்லாட்சிக்கு உகந்ததில்லை – ரஞ்சன்

wpengine

எரிபொருள் விலையில் திருத்தம்

wpengine