ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு உறுப்பினர்கள் நீக்கம்..?



கூட்டு எதிரணியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது.

இரத்தினபுரி மற்றும் குருநாகல் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிகைகளை எடுக்குமாறு சு.கவின் மத்திய குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை, சு.கவின் ஒரு சில உறுப்பினர்கள் இரண்டாகப் பிளவுபட்டு நின்ற போதிலும் அவர்கள் கட்சியைப் பற்றியோ அதன் தலைமைத்துவத்தைப் பற்றியோ குறைகூறுவது கிடையாது.

எனவே, அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்காமல் சுமூகமாகப் பேசி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

Related posts

சப்ரகமுவ மாகாண சபைக்கு கேகாலையிலிருந்து இரு பிரபலங்கள்..

wpengine

ராஜபக்ஷர்களின் சொத்தினை பெற்றுக்கொள்ள பிரயத்தனம் செய்யும் பிரபல அமைச்சர்!

wpengine

பாசிக்குடாவில் உல்லாசம் அனுபவிக்கும் மஹிந்த ராஜபக்ஸ

wpengine