உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை மாற்றப்பட வேண்டும் – புத்ததாஸ..



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை உடனடியாக மாற்றப்பட வேண்டும் என குறித்த கட்சியின், கடுவலை நகர சபையின் முன்னாள் மேயர் ஜீ.எச். புத்ததாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(03) இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் பொது வேட்பாளராக களமிறங்கியப் போது தன்னை அழைத்ததாகவும் அதற்கமைய தான் அவருக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து கடந்த மாகாண சபைத் தேர்தலில் மொட்டுவின் வேட்பாளராக களமிறங்கியிருந்தால் இன்று தான் கடுவெல மாநகர சபையின் மேயராக இருந்திருப்பேன் என்றும் ஜீ.எச். புத்ததாஸ தெரிவித்துள்ளார்.

Related posts

டெடனேட்டர்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் கைதான 4 பேரையும் தடுத்து வைத்து விசாரணை

wpengine

வேலையற்ற பட்டதாரிகள் புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்பாட்டத்தில்…

wpengine

ஏ9 வீதியில் முதல் கடும் பனி மூட்டம்…

wpengine