உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள 3 அமைச்சுக்களுக்கு புதிய செயலளர்கள் நியமிப்பு



அமைச்சரவை அந்தஸ்த்துள்ள மூன்று அமைச்சுக்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்கள் மூவரும்,  ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபேகோனிடமிருந்து தங்களுக்கான நியமனக்கடிதங்களை இன்று திங்கட்கிழமை பெற்றுக்கொண்டனர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்தே, அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் கையளிக்கப்பட்டன.

வெளிவிவகார, பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ மற்றும் தபால் சேவைகள் ஆகிய மூன்று அமைச்சுகளுக்கே புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக எசல வீரகோன்  நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின், இராஜதந்திர சேவையில் உள்ள சிரேஷ்ட அதிகாரியான எசல வீரகோன்,  1988இல் வெளிவிவகார சேவையில் இணைந்துகொண்டதுடன், அவர் பல நாடுகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் புதிய செயலாளராக ஜே.ஜே.ரத்னசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

தபால் சேவைகள் அமைச்சின் புதிய செயலாளராக டீ.ஜீ.எம்.வீ. ஹப்பு ஆராய்ச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்ட புதிய செயலாளர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சுமூகமான ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

Related posts

உச்ச பட்ச இழப்பீடுகளுக்காக போலி நாடகம் போடும் அரசியல்வாதிகள் !

wpengine

ஹர்ஷவிற்கு புதிய உறுப்பினர் பதவி

wpengine

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியின்மை..!

wpengine