ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வென்னப்புவ கள்ள காதலன் நுவரெலியாவில் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நானுஓயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நானுஓயா சமர்செட் தோட்டம் ஈஸ்டல் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யபட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 9.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொலை செய்த நபருடைய மனைவிக்கும் சம்பவத்தில் பலியான நபருக்கும் இடையில் தகாத உறவுமுறை ஒன்று இருப்பதை அறிந்து கொண்ட நபர், இவர்கள் இருவரும் அப்பகுதியில் சென்றுக் கொண்டிருந்த வேளையில் குறித்த நபரை தாக்கியுள்ளார்.

இதன் போது சம்பவ இடத்தில் கள்ள காதலன் பலியானதோடு, கொலை செய்த நபர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பலியான நபர் புத்தளம், வென்னப்புவ பகுதியில் வசிக்கும் ஏ.ஜி. சசேந்திர பெர்ணான்டோ (வயது 43) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

அமைச்சர் ரிஷாதின் ஆதரவைக் கோரி எஸ்.பி திசாநாயாக்க எடுத்த தொலைபேசி அழைப்பு அம்பலம் (குரல்பதிவு)

wpengine

ஞானசார தேரருக்கு கிறிஸ்மஸ் தினமன்று விடுதலை..?

wpengine

அடுத்த பிரதமர் பொலன்னறுவையில் இருந்து..

wpengine