உலக செய்திகள்

வெனிசுலா ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்றார் நிக்கோலஸ் மதுரோ…



சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் ஜனாதிபதி பதவியை கைப்பற்றிய நிக்கோலஸ் மதுரோ இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

வெனிசுலா நாட்டில் நிக்கோலஸ் மதுரோ ஜனாதிபதியாக கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பதவி வகித்தார்.

சமீபத்தில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன.

இதையடுத்து அதிக சிரமம் இன்றி நிக்கோலஸ் மதுரோ மீண்டும் ஜனாதிபதி பதவியை கைப்பற்றினார். இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகளும், அமெரிக்கா போன்ற நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. மதுரோவின் வெற்றி ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என அமெரிக்கா அறிக்கை வெளியிட்டது.

மேலும், மதுரோவின் வெற்றியைத் தொடர்ந்து வெனிசுலா மீது புதிய பொருளாதார தடையையும் அமெரிக்கா விதித்தது.

இந்நிலையில், இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அடுத்த 6 ஆண்டுகளுக்கான ஜனாதிபதியாக நிக்கோலஸ் மதுரோ பதவியேற்றார்.

மீண்டும் ஜனாதிபதியாக மதுரோ பதவியேற்றாலும், அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலே அவரது ஆட்சிக்காலம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

அமெரிக்க VIP ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

wpengine

ஜனாதிபதிக்கு நெஞ்சுவலி

wpengine

சிலி தலைநகரில் அவசர நிலை பிரகடனம்

wpengine