உள்நாட்டு செய்திகள்வணிகம்

விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலை அதிகரிப்பு..!



எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய நாளை(10) தினம் குறிப்பிட்ட திருத்தத்திற்கு அமைய எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலையில் 57 டொலர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் குறித்த விலை அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த டிசம்பர் மாதம் 21ம் திகதி அரசு, எரிபொருள் விலையினை குறைத்திருந்த போது, உலக சந்தையில் கச்சா எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலையில் 53 டொலர்கள் வரையில் குறைக்கப்படிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னார் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை

Azeem Kilabdeen

ஓசரி’சாரியினை தூக்க மாணவர்களை பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை..

wpengine

இலங்கையில் கொரோனா வைரஸ் ?

wpengine