உள்நாட்டு செய்திகள்

விரைவில் 25 மருந்துப் பொருட்களின் விலைகள் குறைப்பு….


எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் 25 மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலைகள் குறைக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

மருந்துப் பொருட்களின் விலை குறைப்பு சுமார் இரண்டு பில்லியன் ரூபா அரச செலவினங்களை மீதப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் ஏழு பில்லியன் ரூபாவுக்கு அதிகமான தொகையை அரசாங்கம் செலவிட்டு வந்தமை குறிபிடத்தக்கது.

Related posts

கோட்டாபயவை கைது செய்வதற்கான இடைக்கால தடையுத்தரவு ஜனவரி 25 ம் திகதி வரை நீடிப்பு…

wpengine

அரச வாகனங்களை கையளித்தார் சஜித்

wpengine

பொலிஸார்  துப்பாக்கிச் சூட்டில்  அனுராதபுரத்தில் ஒருவர் பலி

wpengine