ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

விமானப் பணிப்பெண்ணினால் அர்ஜுன ரணதுங்கா மீது பாலியல் குற்றச்சாட்டு…


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜுன ரணதுங்கா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது.

இந்திய விமானப் பணிப்பெண் ஒருவர் கடந்த 10ம் திகதி முகநூல் பக்கத்தில், இந்திய ஹோட்டல் ஒன்றில் நீச்சல் குளம் அருகே ரணதுங்கா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி உள்ளார்.

“ஹோட்டலின் நீச்சல் குளம் அருகே நடந்து சென்ற போது ரணதுங்கா என் இடுப்பை பிடித்து கொண்டு இழுத்து, என் மார்பின் பக்கமாக கைகளை கொண்டு வந்தார். மிகவும் அச்சம் அடைந்த நான், அவரது கால்களில் உதைத்தேன். இந்திய பெண்ணோடு தவறாக நடக்க முயற்சி செய்கிறார் என்று புகார் கூறி கடவுச்சீட்டை முடக்கி விடுவேன் என கூறினேன். அத்துடன் நேரத்தை வீணடிக்காமல் நான் வரவேற்பறையை நோக்கி வேகமாக ஓடி புகார் கூறினேன். இருந்தாலும் இது உங்கள் தனிப்பட்ட விஷயம் என்று அவர்கள் கைவிரித்துவிட்டனர்” என பதிவிட்டுள்ளார்.

1996-ம் ஆண்டு இலங்கை உலக கிண்ணத்தினை வெல்ல காரணமாக இருந்தவர் ரணதுங்கா. இவர் 296 ஒருநாள் போட்டிகள் மற்றும் 93 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அன்னம் சின்னத்தில் களமிறங்கும் ரணில், சஜித் “ஐக்கிய மக்கள் சக்தி”

wpengine

அரசியலில் களமிறங்கும் சமிந்த்ராணி

wpengine

ஐக்கிய தேசிய கட்சியில் அதிரடி நடவடிக்கை! அதிர்ச்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள்

wpengine