உள்நாட்டு செய்திகள்

விமல் பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனுவிற்கு எதிர்ப்புகள் இருக்குமாயின் தெரிவிக்குமாறு நீதிமன்றம் அறிவிப்பு…



கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவின் விளக்கமறியல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமல் வீரவங்ச பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனுவிற்கு எதிர்ப்புகள் இருக்குமாயின் அதை தெரிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று(13) கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனுவிற்கு எதிர்ப்புகள் இருக்குமாயின் அவற்றை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரச வாகனங்களை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றும் முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

wpengine

பெரும் போக உற்பத்தியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு…

wpengine

உபாதை காரணாமாக துஷ்மந்தவும் நாடு திரும்பினார்

wpengine