உள்நாட்டு செய்திகள்

விபத்துக்குள்ளான ரங்கே பண்டாரவின் மகனுடைய மோட்டார் வாகனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டாரவின் மகனுடைய மோட்டார் வாகனம் ஆணமடுவ, தோனிகல பகுதியில் நெற்று (11) விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த மோட்டார் வாகனம் ரங்கே பண்டாரவின் மகனான யசோத நெதக ரங்கே பண்டாரவின் பெயரில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மோட்டார் வாகனம் புத்தளத்தில் இருந்து ஆணமடுவ நோக்கிய பயணித்த மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து ஏற்பட்டதன் பின்னர் மோட்டார் வாகன ஓட்டுனர் மற்றும் டிப்பர் வாகன ஓட்டுனர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

​குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

wpengine

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியில்…

wpengine

ஒரு வழி போக்குவரத்துக்காக வீதி மீண்டும் திறப்பு

wpengine