உள்நாட்டு செய்திகள்

விபச்சார விடுதியினை நடாத்திய மட்டு.முன்னாள் மேயர் உட்பட 4வரினதும் விளக்கமறியல் நீடிப்பு.


கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட நான்கு பேர் எதிர்வரும் மாதம் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நீதவான் எம்.கணேசராஜா குறித்த இந்த உத்தரவை பிறப்பித்தார்.

விபச்சார விடுதியொன்றை நடாத்திச் சென்ற குற்றச்சாட்டில் மட்டு . முன்னாள் மேயர் உட்பட 9 பேரை மட்டக்களப்பு காற்துறையினர் நேற்று(23) கைது செய்தனர்.

குறித்த சந்தேகநபர்களில், முன்னாள் மேயரின் கணவரும் அடங்குவதோடு , அவர் உள்ளிட்ட ஐந்து பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உள்ளிட்ட நான்கு பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மீளவும் அன்னச் சின்னத்தில் களமிறங்க தீர்மானம்

wpengine

தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகம் நாளை முதல்

wpengine

சம்மாந்துறை கரங்காவட்டை காணிப்பிரச்சினை அரச அதிபருக்கும் அமைச்சர் ரிஷாட்டுக்குமிடையிலான பேச்சில் சாதகம்

wpengine