உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்து – நேற்றைய தினம் மாத்திரம் 10 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் சில பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளினால் நேற்றைய தினம் மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வருடத்தின் ஆரம்ப காலப்பகுதியில் நாளொன்றுக்கு சுமார் பத்து உயிரிழப்புகள் விபத்துகளினால் பதிவாகியுள்ளன.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், அதிக வேகம் மற்றும் கவனயீனம் என்பன விபத்துக்களுக்கு பிரதானமான காரணங்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயங்களை முற்றாக கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட வாகன சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், விதிகளை மீறும் சாரதிகளை கைது செய்யவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

 

Related posts

வாகன தரிப்பிடங்களில் அறவிடப்படும் அபராதம் நிறுத்தம்…

wpengine

சம்பிக்கவின் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்

wpengine

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காம் நாள் ஆட்டம் இன்று

wpengine