உள்நாட்டு செய்திகள்

இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பதவிக் காலத்தில் பயன்படுத்திய வாகனங்களை இதுவரை கையளிக்காத இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதுவரை கையளிக்கப்படாத 11 வாகனங்கள் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கிய தகவல்களுக்கு அமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வாகனங்களை மீள பெற்றுக்கொள்வது தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (07) கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

மாகாநாயக்க தேரரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள தம்மாலோக்க தேரருக்கு அனுமதி – பிணை குறித்து நாளை தீர்வு

wpengine

ஏழு வயது சிறுமியின் மரணம்! விசாரணையில் வெளியான திடுக்கிடும் காரணம்!

News Editor