உள்நாட்டு செய்திகள்

வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்…



வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதிகள் இன்று(15) சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு அநீதி இடம்பெறுவதாகவும் போதைப்பொருள் பாவனைகளும் அதிகளவில் இடம்பெறுவதாகவும் தெரிவித்து வவுனியா சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனை அடுத்து வவுனியா சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பாவனை இருப்பதாகவும் சட்ட விரோதமாக சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வருவதாகவும் தெரிவித்து கைதி ஒருவரை நேற்று(14) சிறைக்காவலர்கள் தாக்கியமையால் அக்கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக சிறைக்கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட;டதையடுத்து, இன்று (15) சிறைக்கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

ஓய்வூதியம் பதிவு செய்வதற்கான கால எல்லை 31 ஆம் திகதியுடன் நிறைவு…

wpengine

களு, கிங் மற்றும் நில்வலா கங்கை பெருக்கெடுப்பு.. – நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை..

wpengine

கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் பலி

wpengine