உள்நாட்டு செய்திகள்

இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 55 ஆயிரத்து 763 குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 30 ஆயிரத்து 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இந்த வறட்சி அதிகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிநீரை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமானது வறட்சி காரணமாக குறைவடைந்துள்ள போதிலும், மின் தடையை ஏற்படுத்துவதற்கு எந்தவித தீர்மானங்களும் எடுக்கவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட்டதால் அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் மீது நடவடிக்கை…

wpengine

பிணை பெற்ற சாமர சம்பத் விளக்கமறியலில்

Azeem Kilabdeen

இலங்கை தென்பகுதிக் கடற்பரப்பில் விழவுள்ள மர்ம பொருள் (Photos)

wpengine