உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வர்த்தமானி அறிவித்தல் 02இனை சைட்டம் பெற்றோர் சங்கம் கோருகிறது



சைட்டம் மாணவர்களை கொத்தலாவல வைத்திய பீடத்திற்கு இணைத்துக் கொள்ளல் மற்றும் சைட்டம் நிறுவனத்தினை இரத்து செய்தல் ஆகிய வரத்தமானி அறிவித்தல்கள் இரண்டினையும் ஒரே நாளில் விரைவாக வெளியிடுமாறு மாலபே சைட்டம் வைத்திய பீட மாணவர்களது பெற்றோர்களது சங்கம் தெரிவித்துள்ளது.

மாலபே, சைட்டம் வைத்திய பீட மாணவ மாணவர்களை கொத்தலாவல வைத்திய பீடத்திற்கு இணைத்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அண்மையில் தீர்மானம் எட்டப்பட்டதாக அறிவித்திருந்த போதிலும், இதுவரையில் சட்டரீதியாக எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என குறித்த பெற்றோர்களது சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதலால், வர்த்தமானி அறிவித்தல் இரண்டினையும் ஒரு வார காலத்தினுள் வெளியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோருவதாகவும் குறித்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

#rishma

Related posts

சோபித தேரரின் இறுதி ஆசை குறித்து எழுத்து மூலம் எதுவும் எழுதிவைக்கவில்லை

wpengine

ஸ்டீவன் ஸ்மித்தை சுதந்திரமாக விடுமாறு, மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் தலைவர் டெரன் சமி கோரிக்கை…

wpengine

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

wpengine