உள்நாட்டு செய்திகள்

வரவு செலவு திட்டத்தில் சக்கரை நோயாளிகளுக்கு இலவச ஊசி



2016ம் ஆண்டு அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் வரவு செலவு திட்டத்தில் சக்கரை நோயாளிகளுக்கு ஊசி ஒன்று வழங்கப்படும் என்று பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்னும், 2014ம் ஆண்டில் ஆரோக்கியமான பொருளாதார நிலைமை காணப்பட்டதாகவும் அதனால் சக்கரை அல்லது நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய அரசாங்கத்தால் கொண்டுவரப்படவிருக்கும் வரவு செலவு திட்டமானது பொய்யான அறிக்கைகளை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.;

அத்துடன் விவசாயிகளின் நெல் கொள்வனவிற்கான நெல் கிலோ ஒன்றின் நிர்ணயிக்கப்பட்ட விலையாக ரூபாய் 50 தருவதாகவும் தேயிலை உற்பத்தியாளர்களின் பச்சை நிற தேயிலைக்கான கிலோ ஒன்றின் நிர்ணய விலை ரூபாய் 80 என்றும் இறப்பர் உற்பத்தியாளர்களுக்கான நிர்ணய விலை ரூபாய் 350 தருவதாக கூறிய தற்போதைய அரசாங்கம் அவற்றை பெற்றுக்கொடுக்காது மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்

wpengine

கட்டுநாயக்காவில் தரையிறங்க வந்த விமானம் மீண்டும் மேலே  பறக்க ஆரம்பித்ததால் வீடுகளுக்கும், சொத்துக்களுக்கும் சேதம்..!

wpengine

சரத் அமுணுகம அமைச்சரவைப் பதவி

wpengine