உள்நாட்டு செய்திகள்

வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் இராஜினாமா..



வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 107வது அமர்வு இன்று(06) கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தனது உறுப்பினர் பதவியை தான் இராஜினாமா செய்வதாகவும், தன்னுடைய அந்த இடத்திற்கு தங்களது கட்சியில் போட்டியிட்டு வாக்குகளின் அடிப்படையில் அடுத்த நிலையில் உள்ள ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இனமத பேதங்களின்றி தான் செயற்பட்டதாகவும், அதே போன்று முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தொடர்ந்து செயற்பட்டு காணிப் பிரச்சனை முதல் அனைத்துப் பிரச்சிசைகளுக்கும் சுமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்றும் இதன் போது றிப்கான் பதியூதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவர் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இனது சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

குருநாகலில் இடம்பெற்ற கோர விபத்து – 4 பேர் பலி

Azeem Kilabdeen

பிரபல சிங்கள நடிகை சமனலி மற்றும் இந்திரசாபாவுக்கு பிடிவிராந்து

wpengine

ரந்தீர் ரொட்ரிகோ மீது கட்சிசார் ஒழுக்காற்று நடவடிக்கை – பிரதமர் ஆணை..

wpengine