உள்நாட்டு செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் சமஷ்டி ஆட்சியினை எதிர்க்கிறேன் – அமைச்சர் ரிஷாத்



வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துமாறு, வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தனது எதிர்ப்பினை வௌியிட்டுள்ளார்.

தான் உள்ளிட்ட அனைத்து இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் எவரும் இந்த யோசனைக்கு இணங்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா – நெலுங்குளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ரிஷாட் பதியூதின் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மேலும். வட மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தனது கட்சியின் மூன்று உறுப்பினர்களும் இதற்கு எதிர்ப்பு வௌியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பேரணி மீது கண்ணீர்ப் புகை..

wpengine

இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து இரண்டாவது ஒருநாள் போட்டி ஆரம்பம்

wpengine

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine