உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லக்ஸபான வாழமலைத் தோட்டத்தில் மீட்கப்பட்ட கரும்புலி உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -லக்ஸபான தோட்டம் வாழமலை பிரிவில்  வலையில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட அரிய வகை கரும்புலி இன்று காலை உடவளவ சரணாலயத்தில் உயிரிழந்துள்ளதாக உடவளவ கால்நடை வைத்தியர் தெரிவித்துள்ளார்.

கடந்த (26) திகதி அன்று மரக்கறி தோட்ட பாதுகாப்பு வேலியில் சிக்கிய நிலையில் இக்கரும்புலி பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் குறித்த கரும்புலி மேலதிக சிகிச்சைகளுக்காக உடவளவ யானைகள் சரணாலயத்தின் கால்நடை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

பிரதமரின் வீட்டிற்கு தீ வைப்பு

News Editor

இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று(20)…

wpengine

IMF உடன் இம்மாத கடைசியில் ஒப்பந்தம் கைச்சாத்து: ஜனாதிபதி ரணில் நம்பிக்கை

News Editor