உள்நாட்டு செய்திகள்

ருஹுனு பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையிலிருந்து போதைப்பொருள் மீட்பு.


ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கும் ஹெரோயின் குடு பொதிகள் 10 உடன் 37 வயது மதிக்கத்தக்க நபரொருவர் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த சந்தேக நபரினை எதிர்வரும் 25ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த போதைப்பொருள் பொதி ஒன்று 3000 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும், சந்தேக நபர் சிற்றுண்டிச்சாலையினை நாடாத்திச் செல்லும் நபரினது உறவினர் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

தபால் மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பம்

wpengine

பகிடிவதைக்கு எதிரான சட்டம் உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படும்…

wpengine

இலங்கை சட்ட கல்லூரியில் பிரதி அதிபர் பதவியொன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம்…

wpengine