உள்நாட்டு செய்திகள்

ரவி, மத்திய வங்கியின் உள்ளக பாதுகாப்பினை பிரபல அமைச்சரின் மருமகனுக்கு கையளித்தாரா.??


இலங்கை மத்திய வங்கியின் உள்ளக பாதுகாப்பு  வழங்கும் பொறுப்பை தனது நிறுவனத்துக்கு பெற்றுத் தருமாறு பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினது முன்னாள் மருமகன் தனுன திலகரத்னவினது நிறுவனமான யுனைடெட் கார்ட்ஸ் க்ளோபல் பிரைவட் லிமிடெட் (United Guards Global (Pvt) Ltd) விண்ணப்பம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக விண்ணப்பித்த பின்னர், குறித்த விண்ணப்பத்தினை குறுகிய பட்டியளில் (Short List) உட்சேர்க்குமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் முத்திரையுடன் கூடிய பரிந்துரை கடிதமொன்றையும் மத்திய வங்கி யின் ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த அமைச்சரின் மருமகனுடைய நிறுவனத்துக்கு மத்திய வங்கியின் உள்ளக பாதுகாப்பு விவகாரங்களை பொறுப்பளிக்குமாறும் குறித்த அந்த கடிதத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த பரிந்துரை கடிதமானது,

Image 1

Related posts

மத்திய வங்கி விவகாரம் குறித்து ஆராய விஷேட ஜானதிபதி ஆணைக்குழு…

wpengine

இராணுவத்திற்கு புதிதாக ஆட்சேர்ப்பு பணிகள் ஆரம்பம்

wpengine

ஹதுருசிங்கவை தலைமை பயிற்சியாளராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் சபை தயார்..

wpengine