உள்நாட்டு செய்திகள்

ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு ஒத்திவைப்பு…


முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(22) உத்தரவிட்டுள்ளது.

பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க இன்று(22) நீதிமன்றத்திற்கு வராத காரணத்தினால் குறித்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு பதில் நீதவான் பிரியந்த லியனகே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

பிணைமுறி ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பொய் சாட்சி கூறியதாக இரகசிய பொலிஸாரினால், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பரீட்சை வினாத்தாள் வெளியாகியமை குறித்து கைதாகிய மாணவனும் தந்தையும் விளக்கமறியலில்..

wpengine

இன்றும் விசேட போக்குவரத்து…

wpengine

சுகாதார ஊழியர்கள் 27 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு

wpengine