உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரவி’க்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இன்று பாராளுமன்றில் தீர்மானம்..



முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமாகிய ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 34 பேரின் கையொப்பத்துடன் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இன்று(08) பாராளுமன்றத்தில் நடைபெறும் கட்சித்தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் குறித்த இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டது.

நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிப்பதற்காக அவசரமாக திகதியொன்றை நிர்ணயிக்க இன்றைய கூட்டத்தில் கோர இருப்பதாகவும் கூட்டு எதிர்க் கட்சித் தலைவர் தினேஷ் குணவர்தன மேலும்
தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

எங்கள் உணர்வுகளை மதித்து வர்த்தமானியை உடன் வெளியிடுங்கள்

wpengine

ஹம்பாந்தோட்டை தவிர மொனராகலை,மாத்தறை மாவட்டங்களிலும் சீனாவிற்கு காணி ஒதுக்கப்படும்..

wpengine

உயரதிகாரிகளை நியமிக்க விஷேட குழு

wpengine