உள்நாட்டு செய்திகள்

ரயில்வே திணைக்களத்திற்கு வருடாந்தம் ஏற்படும் நட்டம் 15 பில்லியன் ரூபா வரை அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போதைய நெருக்கடி நிலையில் தொடருந்து திணைக்களத்திற்கு வருடாந்தம் ஏற்படும் நட்டம் 15 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மாத்திரம் பல சந்தர்ப்பங்களில் எரிபொருள் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் அதற்கு நிகராக ரயில் பயணக் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என தொடருந்து திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

பேருந்து பயணக் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் நான்கில் ஒரு பங்கை விடவும் குறைவான கட்டணமே ரயில்க்கு அறவிடப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எனினும் பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையை அடுத்து ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அவ்வாறு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் பயணக் கட்டணம் குறைவாக உள்ளமையினால் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்ய முடியாமல் உள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி நாடு திரும்பினார்…

wpengine

நூறு வயதினை தாண்டிய பிரஜைகளுக்கு மாதாந்த கொடுப்பனவு…

wpengine

சித்திரைப் புத்தாண்டுக்கு விசேட போக்குவரத்து

wpengine