Top Story 3உள்நாட்டு செய்திகள்

ரயிலில் மோதி இளம் தம்பதி மரணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெஹிவளை ரயில் பாதையில் பயணித்த தம்பதியொன்று கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (04) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பதுளை, பதுலுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய நூல்களை பாடசாலைகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை

wpengine

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை – இலங்கை மத்திய வங்கி அறிக்கை…

wpengine

“மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் வாக்குகளை சமூகத்துக்கான சிறந்த முதலீடாக எண்ணுங்கள்” – புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

wpengine