கேளிக்கை

யோகிபாபு மீது பொலிஸில் முறைப்பாடு – இன்று திடீர் திருமணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல காமெடி நடிகர் யோகிபாபு மீது, இந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பு சார்பில் நேற்று சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் முறைப்பாடு மனு ஒன்று கொடுக்கப்பட்டது.

அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
தமிழ் சினிமாத்துறையில் சமீபகாலமாக இந்து கடவுள்களையும், இந்து மத உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் உள்ளன.

காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ள ஒரு படத்தில், அவர் முருகன் வேடத்தில் இருப்பது போன்ற காட்சி போஸ்டராக வெளியாகி உள்ளது. அதில் முருகனின் வாகனமான மயிலுக்குப்பதில், கிளியை போட்டு கிண்டல் செய்துள்ளனர்.

இது முருக பக்தர்களின் மனதை புண்பட வைத்துள்ளது. இதற்கு காரணமான நடிகர் யோகிபாபு மீதும், அந்த படத்தின் இயக்குனர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு, மஞ்சு பார்கவி என்ற பெண்ணை இன்று திருமணம் செய்துள்ளார்.

இவர்களின் திருமணம் யோகி பாபுவின் குலதெய்வ கோவிலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Related posts

நடிகர் தவசி காலமானார்.

wpengine

தளபதி விஜய் ட்ரெண்டாகிட்டாரு [PHOTOS]

wpengine

ஆபாச சினிமா போஸ்டருக்கு தடை…

wpengine