Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யூடியூப் சேனல் தொடங்கி, மகளை நிர்வாணமாக படமெடுக்க முயற்சித்த கணவனை வெட்டிக்கொன்ற மனைவி..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனது 14 வயது மகளின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து பணம் தேட முயற்சித்த கணவனை மனைவி வெட்டிக் கொன்ற சம்பவம் வெல்லவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலை உதவியாளராக பணியாற்றிய 37 வயதுடைய வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டின் குளியலறையில் மறைந்திருந்த கணவன் மீது மனைவி, மிளகாய்ப் பொடியை வீசியதாகவும், மிளகாய்ப் பொடி தாக்குதலுக்கு உள்ளானவர், வெளியே வந்த போது, மனைவி வெட்டிக் கொன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்கு இலக்காகி வீட்டின் வரவேற்பறையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் சமீபத்தில் யூடியூப் சேனலை தொடங்கி, பெண்களின் நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அதை பிரபலப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வந்தது பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்தது.

Related posts

எரிபொருள் விலை – அமைச்சரவையில் இன்று இறுதி தீர்மானம்…

wpengine

இலங்கைக்கும் சுவிஸிக்கும் இடையிலான அரசியல் புரிந்துணர்வு உடன்படிக்கை

wpengine

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான மீளாய்வு அறிக்கை விரைவில்…

wpengine