விளையாட்டு

யுவராஜ் சிங்’கிற்கு பதிலாக மானிஷ் பாண்டே களத்தில்



உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் களமிறங்குவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.

எதிர்வரும் 31ம் திகதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட யுவராஜ் சிங் களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

யுவராஜ் சிங் காயத்தில் இருந்து முழுமையாக குணம் அடையாததால், அவருக்கு பதிலாக கர்நாடாகவை சேர்ந்த மணிஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related posts

கேன் வில்லியம்ஸ் டெஸ்ட் சாதனைப் புத்தகத்தினை மீள் நிரப்பினார்…

wpengine

கிறிஸ் வோக்ஸ் முன்னேற்றம்

wpengine

ஐசிசி டெஸ்ட் தரவரிசை இலங்கை அணியில் ஹேரத்திற்கு வாய்ப்பு.

wpengine