உள்நாட்டு செய்திகள்

யாழ். புகையிரத சேவை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்…



எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை வடக்கு புகையிரத பாதையின் யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், நாவற்குழி பாலம் சேதமடைந்துள்ளமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாவற்குழி புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் வரையில் விசேட பேரூந்து சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

wpengine

வரலாற்றில் முதற் தடவையாக அரசுக்கு எதிராக இரத்தினபுரியில் கடையடைப்பு

wpengine

தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் 175 பேர் வீட்டிற்கு

wpengine