Top Story 1உள்நாட்டு செய்திகள்

யாரோ செய்த தவறினால் கோட்டாபய வீட்டுக்குச் செல்ல நேரிட்டது, ரணிலுக்கு அவகாசம் வழங்க வேண்டும், தேர்தல் நடத்தக் கூடாது..!

நாட்டைக் கட்டியெழுப்ப சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் விரும்பவில்லை எனவும், கட்சியை வளர்த்து நாட்டை அழிக்கவே விரும்புகின்றனர் எனவும் அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தேசம் வீழ்ந்துள்ள பாதாளத்தில் இருந்து மீளக் கொண்டுவர கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர். ஆனால் யாரோ செய்த தவறினால் அவர் வீட்டுக்குச் செல்ல நேரிட்டது.

அதற்கு யார் பொறுப்பு என்று தெரியவில்லை. ஆனால் தற்போதைய அதிபர்  ரணில் விக்ரமசிங்க நாட்டை அதல பாதாளத்தில் இருந்து மீட்டெடுக்க முன்வந்தார்.

அந்த சவாலை ஏற்று படிப்படியாக நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் அவருக்கு இன்னும் சிறிது கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

நாடு தற்போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை நடத்துமாறு கோருகின்றனர். இந்த நேரத்தில் அதை செய்யக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

பசிலுக்கு கட்சியின் அமைப்பாளராக வருவதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு – ஐ.ம.சு.மு

wpengine

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு…

wpengine

04 நாட்களில் போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 1500 பேர் கைது

wpengine