Top Story 2உள்நாட்டு செய்திகள்

மொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர, மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது..!

மொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யார் நாட்டுக்கு சேவையாற்றினார்கள், யார் நாட்டை சீரழித்தார்கள் என்பதை இருமுறை சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனநாயகம் மற்றும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மதிப்பளித்து செயற்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுஜன பெரமுன மாறுப்பட்ட பொதுச் சின்னத்தில் போட்டியிடும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. ஆகவே மக்களுக்கு மாற்று வழியேதும் கிடையாது.

இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெறும் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

காலை 8 மணிக்கெல்லாம் ஆபீஸ் போகிற மாதிரி குரங்குகள் வராது.. இரவு 12 மணிக்கு குரங்குகளை எண்ணுங்கள்..

Azeem Kilabdeen

கிளிநொச்சி – கொக்காவில் பஸ் விபத்து இருவர் பலி

wpengine

ஜனாதிபதித் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் திங்களன்று

wpengine