Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் 11 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டம்
திவுலப்பிட்டிய காவல்துறை அதிகாரப்பிரிவு – பலுகஹாவெல கிராம சேவகர் பிரிவு

காலி மாவட்டம்
அஹங்கம காவல்துறை அதிகாரப்பிரிவு – கரதுன்கொட, கொவியபான, கஹவன்னாகம மற்றும் தொம்மன்கொட ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்

ஹபராதுவ காவல்துறை அதிகாரப்பிரிவு – லுனுமோதர, பொனவிஸ்டா, கட்டுகுருன்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்

இரத்தினப்புரி மாவட்டம்
பெல்மடுல்ல காவல்துறை அதிகாரப்பிரிவு – தெனவக பாதகட மற்றும் திப்பிடிகல கிராம சேவகர் பிரிவுகள்

குருவிட்ட காவல்துறை அதிகாரப்பிரிவு – குருவிட்ட கிராம சேவகர் பிரிவும், தெல்கமுவ கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நகரப்பகுதி

இதேவேளை, மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட உக்கல கிராம சேவகர் பிரிவும், அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டி காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட தெஹியத்தகண்டிய கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட போடைஸ் கிராம சேவகர் பிரிவின் கொனகல்ல மற்றும் 30 ஏக்கர் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் – கெஹலிய..!

wpengine

தபால்மூல வாக்களிப்பு – விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

wpengine

அவசர கால சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

News Editor