உலக செய்திகள்

மெக்சிகோ சிறை கலவரத்தில் 16 கைதிகள் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | மெக்சிகோ ) – மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 16 கைதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோ நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் பெரும்பாலானோர் போதைப்பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் தொடர்பாக விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் உள்ளனர்.

இந்நிலையில், மெக்சிகோ நாட்டின் வடக்கில் ஜகாடெகாஸ் நகரிலுள்ள செரெரெஸ்கோ பகுதியில் அமைந்துள்ள சிறையில் கைதிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது. இதில் 16 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் படுகாயம் அடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

‘சஹர்’ கொலைக்கு பின்னர் பெண்களுக்கான தடையை தளர்த்தியது ஈரான் [PHOTOS] [VIDEO]

wpengine

தென்னாபிரிக்காவில் வெள்ளம் – 60 பேர் உயிரிழப்பு…

wpengine

இஸ்ரேல் – ஹமாசிற்கு இடையிலான யுத்த நிறுத்தத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு..!

wpengine