உள்நாட்டு செய்திகள்

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜயனாத் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு



முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜயனாத் கொலம்பகேவே பாரிய மோசடி மற்றும் ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் பெறவே அவர் இன்று காலை அழைக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சோமதிலக்க திஸாநாயக்கவிடம் கடந்த 4ஆம் திகதி குறித்து ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகள் பலரிடம் வாக்குமூலம் பெற்றுகொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே ஜனாதிபதி விசாரணைக்குழுவின் எதிரில் முன்னாள் கடற்படைத் தளபதிகள் முன்னிலையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் கொலை – இருவர் வலையில்..

wpengine

சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி விவகாரத்தில் ரவி மட்டும் தொடர்புபடவில்லை – மஹிந்த..

wpengine

மொஹமட் நிசாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை…

wpengine