விளையாட்டு

முதல் ஒருநாள் போட்டி இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று (27) இடம்பெறவிருந்த முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று கராச்சியில் பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்த இரு அணிகளுக்குமான 2வது போட்டி கராச்சியில் நாளை மறுதினம் நடைபெறவிருந்த நிலையில், அது 30 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடர் என்பவற்றில் விளையாடவுள்ளது.

Related posts

இலங்கைக்கு வெற்றியிலக்காக 659 ஓட்டங்களை நிர்ணயம்..

wpengine

மாலிங்கவிடமிருந்து மதீஷவிற்கு பாடம்..!

wpengine

இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கான அணி விவரம் – தலைமை தனஞ்ஜயவிடம்..

wpengine