ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முக்கிய புள்ளி பயணித்த ஹெலிகொப்டரினால் ஏற்பட்ட விபரீதம்!



களுத்துறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தினால், உறுப்பினர்களை இணைந்துக் கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட குழுவினர் பாணந்துறை நோக்கி சென்றுள்ளனர்.

இந்த நாட்களில் பாடசாலை மாணவர்களுக்காக ஆண்டிறுதி பரீட்சை நடத்தப்படும் பாணந்துரை ஸ்ரீசுமங்கல வித்தியாலயத்தின் மைதானத்தில் ஜனாதிபதி உட்பட குழுவினர் பயணித்த ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்டுள்ளது.

அங்கு ஜனாதிபதி உட்பட அரசியல்வாதிகளுடனான ஹெலிகொப்டரை தரையிறக்கும் போது பரீட்சை இடம்பெறும் குறித்த பாடசாலையின் கூரைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய தற்போது ஆண்டிறுதி பரீட்சை நடத்துவதில் சிக்கலான நிலைமையில் பாடசாலை அதிகாரிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

துாக்குமரம் உயிர் பெறுகின்றது!! கைதிகள் கடும் அச்சம்

wpengine

வடிவேலு காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க! ஹெலிகாப்டர் கேட்ட நிவேதா

wpengine

சட்டத்தை மீறிய முன்னாள் நீதி அமைச்சர்

wpengine