உலக செய்திகள்

முகக்கவசம் தொடர்பில் இஸ்ரேலின் அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் |  ஜெருசலேம்) – இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.

கொரோனா வைரசிலிருந்து நம்மைப் பாதுகாக்க முக கவசங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் உள் அரங்கங்களில் இனி முக கவசம் அணிய தேவையில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் 16 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், 16 வயதிற்கு மேற்பட்ட 81 சதவீத பேருக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசி கடந்த ஏப்ரல் மாதம் செலுத்தப்பட்டது.

Related posts

இத்தாலியில் ஏப்ரல் வரை முடக்கம்

wpengine

ஆஸ்திரேலிய துணை பிரதமர் இராஜினாமா…

wpengine

சீனாவிற்கான அனைத்து விமானங்களும் இரத்து

wpengine