உள்நாட்டு செய்திகள்

மீன் பிடி மற்றும் கடல் வள பாதுகாப்பு குறித்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்..



மீன் பிடித்தல் மற்றும் கடல் வளம் பாதுகாப்பு தொடர்பிலான சட்டமூலம் இன்று(06) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் கடல் வளத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடல் துறை சார்ந்த சட்டத்தைப் பலப்படுத்தி நாட்டின் கடறொழிலுக்குள்ள வெளிச் சக்திகளை மட்டுப்படுத்துவது தொடர்பிலான விடயங்கள் குறித்த இச்சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன் பிடிப்பவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தண்டனை பல மடங்கு இரட்டிப்பாக்குவது தொடர்பிலான சட்டங்களும் இதில் காணப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
(rizmira)

Related posts

துப்பாக்கி சூட்டுடில் பெண் பலி

wpengine

கள்ளக்காதலியால் ஒருவர் கொலை

Azeem Kilabdeen

வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இன்று..

wpengine